ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை! அமைச்சர் வாசுதேவ நாணயக்கார….
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இரவு நடந்த சந்திப்பு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். மத்திய வங்கி பிணை முறி மோசடியாளர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து கருத்து கேட்டபோது, அதன் பிரதான சூத்திரதாரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed